Thursday 14 June 2012

இறை வேதம் என்பதற்கான சான்றுகள்


அறிவியல் சான்றுகள்
பிற கோள்களிலிருந்து பூமிக்கு வரும் ஆபத்துக்களைத் தடுக்கும் முகடாக வானம் அமைந்துள்ளது - 2:22, 21:32, 40:64, 52:5
பூமியிலிருந்து மேலேறிச் செல்பவற்றைத் திருப்பியனுப்பும் தன்மை வானத்திற்கு உண்டு என்ற அறிவியல் உண்மை - 86:11
மனித உடலின் தோல்களில் தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன என்ற அறிவியல் விளக்கம் - 4:56
விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் போது மனித இதயம் சுருங்கும் என்ற அறிவியல் உண்மை - 6:125
பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ முடியும் என்ற உண்மை - 2:36, 7:24, 7:25
ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் பூமியின் மீது மோதாமல் இருப்பதற்குப் புவி ஈர்ப்பு விசையே காரணம் என்ற உண்மை - 16:79, 67:19
விண்வெளியில் எவ்வளவு தொலைவு செல்ல முடிந்தாலும்பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது என்ற பேருண்மை - 17:37
பூமி உருண்டை என்பதை உணர்த்தும் துல்கர்ணைன் பயணம் - 18:90
பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம் - 20:53, 43:10, 78:6
பெரு வெடிப்பின் மூலமே உலகம் தோன்றியது என்ற தற்காலக் கண்டுபிடிப்பு குறித்த அறிவியல் முன்னறிவிப்பு - 21:30
கருவில் வளரும் குழந்தை மூன்று மாதங்கள் கழித்தே மனித உருவம் பெறும் - 23:14
நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது - 23:18
கடல்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலும் அவற்றுக்கு இடையே தடுப்பு உள்ளது என்ற அறிவியல் உண்மை - 25:53, 27:61, 35:12 55:19,20
காற்றின் சராசரி வேகம் எவ்வளவு என்பதைக் கணித்துச் சொல்லும் அற்புதம் - 34:12
வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி - 35:41
பல கிழக்குகள்பல மேற்குகள் என்று கூறுவதன் மூலம் பூமி உருண்டை என்பதை நிரூபித்தல் - 37:5, 55:17, 70:40
பெரு வெடிப்புக்குப் பின் தூசுப் படலத்திலிருந்து கோள்கள் உருவாயின - 41:11.
மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பூமியிலிருந்தே தங்கள் எடையை எடுத்துக் கொள்கின்றன என்ற உண்மை -6:98, 50:4, 71:17
விண்வெளிப் பயணம் சாத்தியமே என்று அறிவித்தல் - 55:33-35
விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம் - 75:4
உயிரின உற்பத்தியில் பெண்களுக்கும் பங்குண்டு - 76:2
தேனீக்களின் வாயிலிருந்து தேன் வெளிப்படவில்லைவயிற்றிலிருந்து வெளியாகின்றது என்ற அறிவியல் - 16:69
கடலின் மேற்புறத்தில் மட்டுமின்றி கடல் ஆழத்திலும் பேரலைகள் ஏற்படுகின்றன என்ற அறிவியல் கருத்து - 24:40
அன்னியப் பொருள் எதையும் ஏற்காத கர்ப்ப அறைகருவை மட்டும் குறிப்பிட்ட காலம் வரை ஏற்றுக் கொள்ளும் அற்புதம் - 13:8
பொய் சொல்வதற்கான நரம்புகள் மூளையின் முன் பகுதியில் தான் உள்ளன என்ற விஞ்ஞானக் கூற்றை முன்பே தெரிவித்தது -96:15
காற்றிலுள்ள ஆக்ஸிஜன் நீக்கப்பட்டால் அது அனைத்தையும் அழித்து விடும் என்ற அறிவியல் உண்மை - 51:41,42
கைகளை விலாப்புறத்துடன் சேர்த்துக் கொள்வது பயத்தைக் குறைக்கும் என்ற மனோதத்துவ உண்மை - 28:32
விந்து எங்கிருந்து வெளியேறுகின்றது என்ற அறிவியல் உண்மை - 86:7
வான்வெளியிலும் பாதைகள் உண்டு என்று கூறும் வானியல் விஞ்ஞானம் - 51:7
பூமிக்கு ஈர்க்கும் சக்தி உள்ளது என்ற அறிவியல் உண்மை - 13:2, 31:10
சூரியனும் கோள்களும் ஓடுகின்றன என்ற அறிவியல் உண்மை - 13:2, 31:29, 35:13, 36:38, 39:5
சந்திரன் பிளந்தது பற்றியும் அதற்கான சான்று சந்திரனில் பதிவாகி உள்ளது பற்றியும் அறிவித்திருப்பது - 54:2
வான் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கின்றது என்ற அறிவியல் விளக்கம் - 51:47
உயிரினங்கள் மட்டுமின்றி அனைத்திலும் ஜோடி உண்டு என்ற உண்மை - 13:3, 20:53, 36:36, 43:12, 51:49
உலக வெப்ப மயமாதலால் பனிப்பாறை உருகிகடல் மட்டம் உயர்ந்து நிலப்பரப்பு குறையும் என்ற அறிவியல் முன்னறிவிப்பு -13:41, 21:44
வான் மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றை அப்படியே முழு விபரத்துடன் விளக்கும் அதிசயம் - 24:43
அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும் என்பது பற்றிய முன்னறிவிப்பு - 105:1-5, 11:82, 15:74, 26:173, 27:58, 51:32
* "இருள்கள்என்று பன்மையாகக் கூறுவதன் மூலம் நிறங்களுக்கு அலை நீளம் உண்டு என்பதையும்நிறத்திற்கு நிறம் அலை நீளம் மாறுபடும் என்பதையும் விளக்கியுள்ளது. - 2:17, 2:19, 2:257, 5:16, 6:1, 6:39, 6:59, 6:63, 6:97, 6:122, 13:16, 14:1, 14:5, 21:87, 24:40, 27:63, 33:43, 35:20, 39:6, 57:9, 65:11
பொருட்களைக் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் பற்றிய முன்னறிவிப்பு- 2:259
குளோனிங் சாத்தியம் என்பது பற்றி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறியது - 19:21, 19:29,30, 21:91, 23:50
ஒட்டகத்தின் விந்தையான உடலமைப்பைப் பற்றிய விளக்கம் - 88:17, 36:41,42
இரும்பு இப்பூமியில் உருவாகவில்லைவானிலிருந்து இறக்கப்பட்டது என்பது பற்றி அறிவியல் உண்மை - 57:25
படுவேகமாகச் சுழலும் பூமியை அதிர்விலிருந்து காக்கும் முளைகளாக மலைகள் உள்ளன - 13:3, 15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27. 78:7, 79:32
பூமி உருவானதற்குப் பின்னர் தான் மலைகள் உருவாயின என்ற விஞ்ஞானிகளின் கூற்றை உண்மைப்படுத்துகிறது. - 41:9,10
நவீனக் கருவிகளும் ஆய்வுக் கூடங்களும் இல்லாத காலத்தில்பாலூட்டி உயிரினங்களிடம் பால் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்பது குறித்த அறிவியல் உண்மை - 16:66
மனிதனைத் தூக்கிச் செல்லும் அளவுக்குப் பெரிய பறவைகள் உலகத்தில் இருந்தன என்ற அறிவியல் உண்மை - 22:31
வருடத்திற்கு எத்தனை மாதங்கள் என்பது நெறிமுறைப்படுத்தப்படாமல் இருந்த காலத்தில் 12 மாதங்கள் தான் என்று அறிவித்தது -9:36
கவலையில் ஆழ்ந்திருப்பவர்களுக்குதவறான தகவல் மூலம் அதைவிடப் பெருங்கவலையை ஏற்படுத்தினால் கவலை மறைந்து விடும் என்ற மனோதத்துவ விளக்கம் - 3:153
முன்னறிவிப்புகள்
கஃபா ஆலயம் காலாகாலம் நிலைத்திருக்குமென்ற முன்னறிவிப்பு - 2:125, 3:97, 5:97, 14:35, 28:57, 29:67, 95:3, 105:1-5, 106:3,4
மக்காவாசிகள் வளமான வாழ்வை அடைவார்கள் என்ற முன்னறிவிப்பு - 9:28
நபிகள் நாயகம் மக்களோடு கலந்து வாழ்ந்திருந்தும்அவர்களை மனிதர்களால் கொல்ல முடியாது என்று பிரகடனம் - 5:67
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஃபிர்அவ்ன் என்பவனது உடல் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற முன்னறிவிப்பு - 10:92
குதிரைஒட்டகங்கள் போன்ற வாகனங்களை மட்டுமே மனிதன் அறிந்திருந்த காலத்தில்நவீன வாகனங்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற முன்னறிவிப்பு - 16:8
மக்காவில் முஸ்லிம்கள் அடி உதைகளுக்கு ஆளாகிக் கொண்டிருந்த காலத்தில்விரைவில் இஸ்லாமிய ஆட்சி உருவாகும் என்ற முன்னறிவிப்பு - 73:20
முஸ்லிம்கள் மிகச் சிறுபான்மையாக இருந்த காலத்தில்நபிகள் நாயகத்தின் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பு - 17:76, 54:45
நபிகள் நாயகம் காலத்தில் பாரசீகர்களால் ரோமாபுரி வல்லரசு தோற்கடிக்கப்பட்டுநிர்மூலமாக்கப்பட்டது. ரோமாபுரி வெற்றி பெறும் என்று கற்பனை கூடச் செய்ய முடியாத நேரத்தில், "சில ஆண்டுகளில் ரோமாபுரிபாரசீகத்தை வெற்றி கொள்ளும்என்ற முன்னறிவிப்பு - 30:2,3,4
நபிகள் நாயகம் அவர்கள் உயிருக்குப் பயந்து மக்காவை விட்டு வெளியேறி அகதியாக இருந்த நிலையில்அவர்கள் மக்காவை வெற்றி கொள்வார்கள் என்ற முன்னறிவிப்பு - 28:85
பாலைவனமாக இருந்த மக்காவுக்குஉலகின் பல பகுதிகளிலிருந்தும் கனிகள் வந்து சேரும் என்ற முன்னறிவிப்பு - 28:57
ஒரு மலைக் குகையில் வேதச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டது பற்றிய முன்னறிவிப்பு - 18:9
முஹம்மது நபியின் பெரிய தந்தையான அபூலஹப் என்பவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்ற முன்னறிவிப்பு -111:1,2
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரளயத்தின் போது நூஹ் என்ற இறைத்தூதர் கப்பலில் காப்பாற்றப்பட்டார். அந்தக் கப்பல் ஒரு மலை மீது பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற முன்னறிவிப்பு - 11:44, 29:15, 54:15
மதீனாவில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த நயவஞ்சகர்கள்விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பு - 33:60
குர்ஆன் காலாகாலத்துக்கும் பாதுகாக்கப்படும் என்ற முன்னறிவிப்பு - 15:9
தர்க்கரீதியான சான்றுகள்
குர்ஆனைப் போல் யாராலும் இயற்ற முடியாது என்று அறை கூவல் - 2:23,24, 10:38, 11:13, 17:88, 28:49, 52:34
குர்ஆனில் முரண்பாட்டைக் காட்ட முடியாது என்ற அறைகூவல் - 4:82, 41:42
முந்தைய வேதங்களில் மத குருமார்கள் மறைத்தவற்றை எழுதப்படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் மூலம் குர்ஆன் வெளிப்படுத்தியது - 3:93, 7:157, 48:29
இறைத் தீர்ப்பு பெறுவதற்காகப் பிற மதத்தவர்களுக்கு அறைகூவல் விட்ட நபிகள் நாயகத்தின் ஆன்மீக பலம் - 3:61
இறை அதிகாரத்தில் நபிகள் நாயகத்துக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அறிவிப்பதன் மூலம் தர்க்க ரீதியாக இறைவேதம் என்று நிரூபித்தல் - 3:28
குருடரைப் புறக்கணித்த நபிகள் நாயகத்தைக் கடுமையாகக் கண்டிக்கும் வசனத்தையும் மக்களுக்கு ஓதிக் காட்டிதர்க்க ரீதியாக இறைவேதம் என்று நிரூபித்தல் - 80:1-8
நபிகள் நாயகம்தமது தூய வாழ்க்கையைத் தமது நம்பகத் தன்மைக்குச் சான்றாக ஆக்கிஅதன் மூலம் தாம் கொண்டு வந்த வேதம் உண்மையானது என்று நிறுவுதல் - 10:16
நபிகள் நாயகத்தின் மனைவி மீது களங்கம் சுமத்திய ஒருவருக்குமனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட்ட போது அதைக் குர்ஆன் கண்டிப்பதன் மூலம் இது நபிகள் நாயகத்தின் சொந்தக் கருத்து அல்லஇறைவேதம் தான் என்று தர்க்க ரீதியாக நிரூபித்தல் - 24:

No comments:

Post a Comment