Thursday 26 July 2012

பிறர் மானம் காப்போம்


 பிறர் மானம் காப்போம்


- யூசுஃப் பைஜீ, கடையநல்லூர்


 ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய மானத்தையும், மரியா தையும் பாதுகாக்க வேண்டும். எந்நிலையிலும் தன்னு டைய மானத்தையும், மரியாதையும் இழந்து விடக்கூடாது. ஒருவர் மானத்தையும், மரியாதையும் இழக்க நேரிட்டால் சண்டையிட லாம். அந்த சண்டையில் அவர் கொல்லப்பட்டால் அவருக்கு ஷஹீ தின் நன்மை கிடைக்கும் என்று இஸ்லாம் கூறுகிறது.

யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படு கிறாரோ அவர் ஷஹீதாவார். யார் தன்னுடைய மார்க்கத்திற்காக கொல்லப்படுகி றாரோ அவரும் ஷஹீதாவார். யார் தன்னை பாதுகாப்பதற்கு போரிட்டு கொல்லப் படுகிறோரோ அவரும் ஷஹீதாவார். யார் தன்னுடைய பொருளை பாதுகாப்ப தற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார். யார் தன்னுடைய குடும்பத்தை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிதி (1341)

 மானத்தின் முக்கியத்துவம்

 அபூபக்ரா (நுஃபைஉ பின் அல்ஹாரிஸ்-ரலி) அவர்கள் கூறியதாவது : (துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந் திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், இது எந்த நாள்?'' என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?'' என்று கேட்டார்கள். நாங்கள் ஆம்' என்றோம். அடுத்து இது எந்த மாதம்?'' என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் இது துல்ஹஜ் மாதமல்லவா?'' என்றார்கள். நாங்கள் ஆம்' என்றோம். நபி (ஸல்) அவர்கள் உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம், மரியதைகளும் உங்களுக்குப் புனித மானவையாகும்'' என்று கூறிவிட்டு, (இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிடவேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மைவிட நன்கு புரிந்து நினைவில்கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்'' என்றார்கள்.
 நூல் : புகாரி (67)

 இஸ்லாம் ஒருவரின் மானத்திற்கும், மரியாதைக்கும் எவ்வளவு முக்கியத்து வம் வழங்கியிருக்கிறது என்பதை இந்த செய்தியை படிப்பவர்கள் விளங்கி கொள்ளலாம். அல்லாஹ்வை பயந்த எந்த முஸ்லிமும் பிறமுஸ்லிமை கொள்ள மாட்டார். அல்லாஹ்வை பயந்த எந்த முஸ்லிமும் பிறரின் பொருளை அபகரிக்க மாட்டார். ஆனால் இன்று முஸ்லிம்கள் சர்வ சாதரணமாக பிறமுஸ்லிம்களின் மானம், மரியாதை விஷயங்களில் விளையாடி விடுகிறார்கள்.
 பிற முஸ்லிம்களின் மானம் மரியாதையில் விளையாடுவது கஃபதுல் லாஹ்வை இழிவு படுத்தியத்திற்கு சமமானதாகும். அந்த புனித நாட்களை இழிவு படுத்தியதற்கு சமமானதாகும் என்ற கருத்தையும் அந்த நபிமொழியில் நாம் அறியலாம். இஸ்லாம் மானம், மரியாதைக்கு எவ்வளவு முக்கியம் கொடுத்தி ருக்கிறது என்பதை பின்வரும் நபிமொழியிலும் அறியலாம்.
 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டி ருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்மைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக் குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 நூல்: முஸ்லிம் (5010)

 ஒரு முஸ்லிமின் உயிரை கொல்வது எவ்வளவு குற்றமோ அதே அளவு குற்றத்தை நபிகளார் மான,மரியாதையை கெடுக்கும் விஷயத்திற்கும் கொடுத்துள் ளார்கள்.
 நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மிகவும் திருப்புமுனையாக அமைந்தது அகபா உடன்படிக்கை நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியின்போதுதான் சில ஒப்பந்தங்கள் எடுக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் இந்த மானம், மரியாதை தொடர்பான உடன்படிக்கையும் எடுக்கப்பட்டது. பத்ருப்போரில் கலந்துகொண்டவரும், இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
 (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, அல்லாஹ்வுக்கு எதையும் (எவரை யும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும், திருட மாட்டீர்கள் என்றும், விபச்சாரம் புரியமாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்துகொண்டு வரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில் இவ்வுலகில் தழைக்கப்படும் அநியாயங்கள்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக் கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனு மொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலக வாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்'' என்ற சொன்னார்கள். உடனே நாங்கள் அவற் றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.
 நூல்; புகாரி (18)

 மேலும் இஸ்லாம் மானம், மரியாதை விஷயத்திற்கு எவ்வளவு முக்கியத் துவம் கொடுத்துள்ளது என்பதை விளங்க வேண்டுமானால் ஒருவரின் மானத் தோடு விளையாடிவருக்கு கொடுத்திருக்கின்ற தண்டனைகளை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.

 அவதூறு

 ஒருவரின் மானம் மரியாதை கெடுக்க கூடிய காரியங்களில் அவதூறு முக்கிய இடத்தை வகிக்கிறது. ஒரு ஆண் மீது அவதூறு சொல்லும்போது அவன் அடையும் துன்பத்தைவிட ஒழுக்கமுள்ள பெண்ணின் மீது ஒருவன் அவதூறு சுமத்துவானேயானால் அதனால் அந்தப் பெண்ணின் வாழ்க்கையே பாழகிவிடும் என்பதை உணர்ந்த இஸ்லாம், ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்துவோ ருக்கு 80 கசையடி கொடுக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றது. பெண்களு டைய மானம், மரியாதை விஷயத்தில் இஸ்லாம் கூடுதல் கவனம் செலுத்து கின்றது.
 ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சி யத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.
 அல் குர்ஆன் 24 : 4
 ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு சொல்பவர்களுக்கு 80 கசையடி கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பிற காரியங்களுக்காக அவர் சாட்சி சொல்ல வரும் போதெல்லாம் நீ அவதூறு சொன்னவன் உன்னுடைய சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மற்றவர்கள் கூறுவது இவ்வாறு அவதூறு கூறிய வருக்கு சரியான தண்டனை இதைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. இன்று பெருபான்மையான முஸ்லிம்கள் விபச்சாரம் புரிவது கிடையாது. ஆனால் பிற ஒழுக்கமுள்ள பெண்கள் மீது விபச்சார பழியை சொல்லி விடுவார்கள். விபச்சாரம் செய்பவர்களை கண்டால் அவர்களை கண்டிப்பார்கள், காரி உமிழுவார்கள், அவரோடு சேர மாட்டார்கள், எவ்விதமான எதிர்ப்பையும் காட்டு வார்கள். ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு சொல்பவர்களை பார்த்தால் எந்த எதிர்ப்பையும் காட்டமாட்டார்கள். அவனை வரவேற்பார்கள். எல்லா விதமான ஆதரவையும் தெரிவிப்பார்கள். இன்று அவதூறு கேட்பவர்களில் சிலரை பார்க்கிறோம். இதற்கு காட்டுகின்ற ஆர்வம் ஈடாக ஒரு மார்க்க சொற்பொழிவை கேட்க முன் வரமாட்டார்கள். அவதூறை கேட்பவர்கள் அதை பரப்ப கடும் குஷியில் இருப்பார்கள். அவர்களுக்கு அதை வெளியே சொல்லவில்லையென்றால் தலையே வெடித்து விடும். யாருக்கு சொல்ல வேண்டுமோ அவர் வெளிநாட்டில் இருந்தாலும் அதை போன் மூலம் சொல்லிவிடுவார். இத்தகைய நபர் சாதரண மற்ற நேரங்களில் வெளி நாடுகளில் இருக்கும் தனது நண்பர்களும் உறவினர்களும் நோயுற்று இருந்தா லும்கூட ஒரு தடவை விசாரித்திருக்கமாட்டார். ஆனால் அவதூறுக்காக பல தடவை தொலைபேசியை பயன்படுத்துவார்.
 மறுமையில் ஒரு மான நஷ்ட வழக்கு.

இஸ்லாம் இவ்வுலகில் இவ்வளவு தண்டனைகளையும் வழங்கினாலும் மறுமையிலும் கடுமைமையான தண்டனைகளையும், எச்சரிகையும் செய்திருக் கின்றது.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்க் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப் புப் பெற்றுக் கொள்ளட்டும்.) (ஏனெனில், மறுமை நால்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். அறிவிப்பவர் :
அபூஹுரைரா (ர), நூல் : புகாரி (2449)

 நரகவாசிகளின் சீலும் சலமும் உள்ள இடம்

 இஸ்லாம் ஒவ்வொரு குற்றவாளிகளுக்கும் ஒரு இடத்தை தயார் செய்து வைத்திருக்கின்றது. தொழாதவருக்கு ஸகர் என்ற நரகத்தை தயார் செய்து வைத்தி ருப்பதைப்போல பிற முஸ்லமின் மானம், மரியாதை விஷயங்களில் விளையாடி வர்களுக்காகவும் ஒரு இடத்தை தயார் செய்து வைத்திருக்கிறது.
யார் ஒரு முஃமினிடம் இல்லாததை கூறுவாரோ அவரை அல்லாஹ் சகதியும், நரகவாசிகளின் சீலும் சலமும் உள்ள இடத்தில் தங்க வைப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 நூல்: அபூதாவூத் (3123)
 திவாலாகிப் போகும் நன்மைகள்
 இவ்வுலகில் பிறருக்கு கடன்பட்டு அதை திருப்பித் தர முடியாதவன், தான் திவாலாகிப்போனவன் என்று கோர்டில் நிரூபித்தால் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. ஆனால் மறுமையில் நன்மைகள் திவாலாகிப்போனால் பொது மன்னிப்பு என்பது இல்லை. மாறாக கடன் கொடுத்தவரின் தீமையை எடுத்து கடன் பட்டவரின் மேல் சுமத்தி அவன் நரகத்தில் தூக்கி வீசப்படுவான். இந்த கடனில் அவதூறு சொல்லப்பட்டவனும் இறைவனிடம் முறையிட்டு அவனின் நன்மை பெற்று அல்லது இவனின் தீமைகளை அவனுக்கு கொடுத்துச் சென்றுவிடுவான்.
 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), திவாலா கிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். மக்கள், யாரிடம் வெள்ளிக் காசோ, (திர்ஹம்) பொருட்களோ, இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்'' என்று பதிலளித்தார்கள்.
 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்தி ருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்ப டும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக் கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்ப டும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப் போனவர்)'' என்று கூறினார்கள்.
 நூல்: முஸ்லிம் (5037)

 தண்டனையில் கடுமையானது.

ஒரு முஸ்லிமின் மானத்தில் உரிமை இல்லாமல் வரம்பு மீறுவதுதான் (மனிதனுக்கு செய்யும் பாவங்களில்) தண்டனைகளிலே மிகப்பெரியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 நூல்: அபூதாவூத் (4233)
 கிழிக்கப்படும் முகங்கள்
 நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். நான் மிஃராஜிற்கு கொண்டு செல்லப் பட்டபோது ஒரு கூட்டத்தார்களை கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பு உலோகத்திலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் தங்களுடைய முகங்களையும், நெஞ்சையும் பிளந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் என்று ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினேன். அதற்கவர்கள் இவர்கள் தான் மக்களுடைய இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் (புறம் பேசிக் கொண்டிருந்தார் கள்). இன்னும் இவர்கள் தான் மக்களின் மானங்களில் விளையாடிக் கொண்டிருந் தார்கள் என்று கூறினார்.
 நூல்: அபூதாவூத் (4235)

 கிராமவாசிகளில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இன்னின்ன காரியங் களுக்காக எங்கள் மீது குற்றம் உண்டா? என்று கேட்டுக்கொண்டிருந்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (நீங்கள் கேட்ட) பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். முஸ்லிம் சகோதரனின் மானத்தில் சிறிதளவேனும் பங்கம் விளைவித் திருந்தாலும் அவனை மன்னிக்க மாட்டான் என்று கூறினார்கள்.
 நூல்: இப்னுமாஜா (3427)

 சிலர் விளைவுகளை பற்றி சிந்திக்காமலேயே பேச்சை நீட்டிக் கொண்டே இருப்பார்கள். அதில் புறம். கோள், அவதூறு, நக்கல், நையாண்டி அனைத்தும் கலந்திருக்கும். இதைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்தி ருக்கிறார்கள்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஓர் அடியார் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்.
 நூல்: புகாரி (6477)

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக் குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்து களை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரண மாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரண மாக அவர் நரகத்தில் போய் விழுகிறார். இதை அபூஹுரைரா (ர) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 நூல் : புகாரி (6478)

 விளைவுகள்

 அவதூறின் காரணமாக ஒருவர் பாதிக்கப்பட்டு அல்லாஹ்விடம் முறையிட் டால் அந்த பிரார்த்தனை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுவிடுவான். அதனால் நாம் இம்மையிலும் மறுமையில் கடும் தண்டனை ஏற்க நேரிடும்.
 அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ் வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ர) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.
 அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் (ரலி), நூல் : புகாரி (2448)

நபிகளார் காலத்திற்கு பிறகு ஒருவர், நபித்தோழர் மீது அவதூறு சொல்லி அதனால் பதிக்கப்பட்ட சம்பவம் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 ஜாபிர் பின் சமுரா (ர) அவர்கள் கூறியதாவது: (கூஃபாவின் ஆளுநர்) சஅத் பின் அபீவக்காஸ் (ர) அவர்களைப் பற்றி கூஃபா வாசிகள் (சிலர்) உமர் (ர) அவர்கடம் முறையிட்டனர். எனவே (அது குறித்து தீர விசாரித்து) உமர் (ர) அவர்கள் சஅத் (ர) அவர்களை (பதவியிருந்து) நீக்கிவிட்டு அம்மார் (ர) அவர்களை அவர்களுக்கு அதிகாரியாக நியமித்தார்கள். சஅத் (ர) அவர்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்பதும் அவர்கன் முறையீடுகல் ஒன்றாக இருந்தது. ஆகவே, உமர் (ர) அவர்கள் சஅத் (ர) அவர்கடம் ஆளனுப்பி அவர்களை வரவழைத்து; அபூ இஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று இவர்கள் கூறுகின்றனரே (அது உண்மையா?)'' என்று கேட்டார்கள். அதற்கு அபூ இஸ்ஹாக் (சஅத் பின் அபீவக் காஸ்-ர) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே நான் அவர்களுக்குத் தொழுவித்து வந்தேன்; அவர்கள் தொழுது காட்டியதைவிட நான் குறைத்து விடவில்லை. நான் இஷாத் தொழுகை தொழுவிக்கும்போது முதல் இரண்டு ரக்அத்கல் நீளமாக ஓதியும் பின் இரண்டு ரக்அத்கல் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன்'' என்று பதிலத்தார்கள். அதற்கு உமர் (ர) அவர்கள், உங்களைப் பற்றி (நமது) எண்ணமும் அதுவே' என்று கூறினார்கள். இதையொட்டி உமர் (ர) அவர்கள் ஒருவரை' அல்லது சிலரை' சஅத் (ர) அவர்களுடன் கூஃபாவுக்கு அனுப்பிவைத்து, சஅத் (ர) அவர்கள் குறித்து கூஃபாவாசிகடம் விசாரனை நடத்தினார்கள். விசாரிக் கச் சென்றவர் கூஃபாவாசிகடம் விசாரனை மேற்கொண்டார். (கூஃபாவிருந்த) ஒரு பள் வாசல் விடுபடாமல் எல்லாவற்றிலும் அவரைப் பற்றி விசாரித்தார். அனைவரும் சஅத் (ர) அவர்களை மெச்சி நல்லவிதமாகவே கூறினர். இறுதியில் (பிரபல கைஸ் குலத்தின் பிரிவான) பனூ அப்ஸ் குலத்தாரிடம் அவர் விசாரித்தபோது அந்தக் குலத்தைச் சேர்ந்த அபூ சஅதா எனும் குறிப்புப் பெயர் கொண்ட உசாமா பின் கத்தாதா என்பவர் எழுந்து, எங்கடம் நீங்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் நான் (எனது கருத்தைக்) கூறுகிறேன்: சஅத் அவர்கள் (தாம் அனுப்பும்) படைப் பிரிவுடன் தான் செல்லமாட்டார். (பொருட்களை) சமமாகப் பங்கிட மாட்டார். தீர்ப்பு அக்கும்போது நீதியுடன் நடக்கமாட்டார்'' என்று (குறை) கூறினார்.


இதைக் கேட்ட சஅத் (ர) அவர்கள், அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் வின் மீது சத்தியமாக! மூன்று பிரார்த்தனைகள் நான் செய்யப்போகிறேன்'' என்று கூறிவிட்டு, இறைவா! உன்னுடைய இந்த அடியார் (என்னைப் பற்றிக் கூறிய அவருடைய குற்றச்சாட்டில்) பொய் சொல்யிருந்தால் பகட்டுக்காகவும், புகழுக்காகவும் அவர் இவ்வாறு குறைகூறமுன்வந்திருந்தால் அவருடைய வாழ் நாளை நீட்டி (அவரைத் தள்ளாமையில் வாட்டி) விடுவாயாக! அவரது ஏழ்மையையும் நீட்டுவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!'' என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

 இதன் அறிவிப்பாளரான அப்துல் மக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: பின்னர் (சஅத் அவர்கள் மீது பொய்யான குற்றச் சாட்டுக் களைச் சொன்ன அந்த மனிதர் பல சோதனைகளுக்கு உள்ளானார்.) அவரிடம் (நலம்) விசாரிக்கப்பட்டால், நான் சோதனைக்குள்ளான முதுபெரும் வயோதி கனாக இருக்கிறேன்; சஅத் அவர்கன் பிரார்த்தனை என்னைப் பீடித்துவிட்டது'' என்று கூறுவார்.
 அப்துல் மக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: பின்னா()ல் அவரை நான் பார்த்திருக்கிறேன். முதுமையினால் அவரது புருவங்கள் அவரது கண்கள் மீது விழுந்துவிட்டிருந்தன. அவர் சாலைகல் செல்லும் அடிமைப் பெண்களை கிள் அவர்களைத் துன்புறுத்துவார்.
 நூல்: புகாரி (755)

 மானம், மரியாதையை கெடுக்கும் மற்ற செயல்கள்

 குத்தி காட்டுவது, கேவலப்படுத்துவது
 குண்டான ஒருவரைப் பார்த்து யானை என்று சொல்வது அல்லது பிந்து கோஸ் என்று சொல்வதும் ஒருவருடைய மானம் மரியாதை விஷயத்தில் விளை யாடுவதுதான். கண் ஒரு மாதிரியாக இருப்பவரைப் பார்த்து அரைக் கண்ணன், அல்லது மாலைக்கண்ணன், ஒன்றைக் கண்ணண், முண்டக்கண்னு என்று சொல் வதும், பல் நீண்டு இருப்பவரை தேங்காய் திருவி என்று சொல்வதும், பெரிய கை உள்ள ஒருவரைப் பார்த்து வீட்டில் உள்ள ஒட்டடைக்கம்பு என்று சொல்வதும், கால் ஊனமான ஒருவரைப் பார்த்து நொண்டி என்று சொல்வதும், வழுக்கைத் தலை உள்ள ஒருவரைப் பார்த்து இவர் வந்து நின்றால் மெரிக்குரி லைட் தேவையில்லையே என்று சொல்வதும் மிகவும் கேவலமான செயலாகும். இப்படி கூறுபவர்கள் பின்வரும் வசனத்தை படித்து திருந்தட்டும்.
 நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர் கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவ மான பெயர் (சூட்டுவது), கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.
 நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள் ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோ தரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:11,12)
 சமுதாய நலன் கருதி ஒருவரின் குறையை வெளிப்படுத்துவது குற்ற மில்லை. இவரின் குறையை வெளிப்படுத்தவில்லையானால் மக்களின் இவரை நம்பி கெட்டு போய்விடுவார்கள், ஏமாந்துவிடுவார்கள் எனும்போது அவரின் தெளிவுபடுத்துவது கட்டாயமாகும். இதற்கு பின்வரும் நபிமொழி ஆதாரமாகும்.
 ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கடம் (வீட்டுக்குள் வர) அனுமதி கேட்டார். அவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இவர் அந்தக் கூட்டத்தாரிலேயே மிகவும் தீயவர்'' என்று (என்னிடம்) சொன்னார்கள். அவர் வந்து அமர்ந்தபோது அவரி டம் நபி (ஸல்) அவர்கள் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்துகொண்டார்கள். அந்த மனிதர் (எழுந்து) சென்றதும் நான் நபி (ஸல்) அவர்கடம் அல் லாஹ்வின் தூதரே! அந்த மனிதரைக் கண்டதும் தாங்கள் இவ்வாறு இவ்வாறு சொன்னீர்கள். பிறகு அவரிடம் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்து கெண்டீர் களே'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷா! நான் கடுமையாக நடந்து கொண்டதை நீ எப்போதாவது கண்டுள்ளாயா? எவரது தீங்கை அஞ்சி மக்கள் (அவருடன் இயல்பாகப் பழகாமல்) விட்டு விடுகிறார்களோ அவரே மறுமை நால் அல்லாஹ்விடம் அந்தஸ்தில் மிகவும் மோச மானவர் ஆவார்'' என்று சொன்னார்கள்.
 அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்:புகாரி (6032)
மலர்ந்த முகத்துடன் இதமாக பேசிய ஒருவரைப்பற்றி நபிகளார் அவர்கள், இவர்தான் அவர்களின் கூட்டத்திலேயே மிகவும் தீயவர் என்று அடையாளம் காட்டியுள்ளார்கள். ஏனெனில் அந்த தீயவரிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குறை களை வெளிப்படுத்துவது தவறாகாது.

3 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே!

    மேலே (புஹாரி 67) ஹதீஸிலே நீங்கள் குறிப்பிடுவதுபோல் "பிற முஸ்லிம்களின் மானம் மரியாதையில் விளையாடுவது கஃபதுல் லாஹ்வை இழிவு படுத்தியத்திற்கு சமமானதாகும்." எனும் கருத்துப்படக்கூடிய வாசகம் எங்கே இடம்பெற்றுள்ளது?

    அப்படி கருதக்கூடிய வகையில் எந்த அடிப்படையை வைத்து எழுதியுள்ளீர்கள்?

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே!

    மேலே (புஹாரி 67) ஹதீஸிலே நீங்கள் குறிப்பிடுவதுபோல் "பிற முஸ்லிம்களின் மானம் மரியாதையில் விளையாடுவது கஃபதுல் லாஹ்வை இழிவு படுத்தியத்திற்கு சமமானதாகும்." எனும் கருத்துப்படக்கூடிய வாசகம் எங்கே இடம்பெற்றுள்ளது?

    அப்படி கருதக்கூடிய வகையில் எந்த அடிப்படையை வைத்து எழுதியுள்ளீர்கள்?

    ReplyDelete
  3. மானத்தின் முக்கியத்துவம்

    67- حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ : حَدَّثَنَا بِشْرٌ قَالَ : حَدَّثَنَا ابْنُ عَوْنٍ ، عَنِ ابْنِ سِيرِينَ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ، عَنْ أَبِيهِ
    ذَكَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَعَدَ عَلَى بَعِيرِهِ وَأَمْسَكَ إِنْسَانٌ بِخِطَامِهِ ، أَوْ بِزِمَامِهِ- قَالَ أَيُّ يَوْمٍ هَذَا فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ قَالَ أَلَيْسَ يَوْمَ النَّحْرِ قُلْنَا بَلَى قَالَ فَأَىُّ شَهْرٍ هَذَا فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ فَقَالَ أَلَيْسَ بِذِي الْحِجَّةِ قُلْنَا بَلَى قَالَ فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ فَإِنَّ الشَّاهِدَ عَسَى أَنْ يُبَلِّغَ مَنْ هُوَ أَوْعَى لَهُ مِنْهُ.

    ReplyDelete